News May 25, 2024

எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன்: தேஜஸ்வி

image

தன்னை யாரும் மிரட்ட முடியாது என பிஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். தோல்வி அடைந்தால் சிறை செல்ல நேரிடும் என்ற மோடியின் மிரட்டலுக்கு அஞ்சவில்லை என்ற அவர், 34 வயது இளைஞனை 75 வயது முதியவர் மிரட்டுகிறார் எனக் கூறினார். மேலும் பேசிய அவர், கடவுள் கிருஷ்ணர் கூட ஜெயிலில் தான் பிறந்தார் என்றார். முன்னதாக, தேர்தலுக்கு பிறகு பலர் சிறை செல்வார்கள் என மோடி பரப்புரையில் கூறினார்.

Similar News

News March 4, 2026

நாமக்கல்லில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnmkdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04286- 281331 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க

News March 4, 2026

வங்கிக் கணக்கில் பணம்.. உடனே செக் பண்ணுங்க

image

PM KISAN திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2,000 விரைவில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் பயனாளிகளின் விவரங்கள் மாறியிருந்தால் அடுத்த தவணையை பெற முடியாது. எனவே, உங்கள் விவசாய அடையாள அட்டையில் எண்ணில் உள்ள ஆதார் எண், புதிய வங்கிக் கணக்கு, மாற்றப்பட்ட முகவரி என ஏதேனும் மாறியிருக்கிறதா என செக் செய்யவும். மாற்றமிருப்பின், வேளாண் அலுவலகத்திற்குச் சென்று மாற்றிக் கொள்ளுங்கள்.

News March 4, 2026

ஈரானின் உயர் தலைவரே டார்கெட்: இஸ்ரேல் எச்சரிக்கை

image

ஈரானின் உயர் தலைவராக யார் வந்தாலும் அவரை காலி செய்வதுதான் எங்களது இலக்கு என இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் எச்சரித்துள்ளார். இந்த பணியை முடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என இஸ்ரேல் படைக்கு நெதன்யாகு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஈரானின் உயர் தலைவராக கமேனியின் மகன் முஜ்தபா கமேனி பதவியேற்றுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!