News May 25, 2024
கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற இருவர் கைது

IPL இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளை, கள்ளச் சந்தையில் விற்பனை செய்த இருவரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் KKR-SRH அணிகள் மோதுகின்றன. அதற்கான டிக்கெட்டுகளை தாஹா அலி, ராஜ் திலக் ஆகியோர் கள்ளத்தனமாக விற்றுள்ளனர். அவர்களை கைது செய்த போலீசார், 18 டிக்கெட்டுகள், ₹42000ஐ பறிமுதல் செய்தனர். கள்ளச் சந்தையில் டிக்கெட் வாங்கி ஏமாறாதீர்.
Similar News
News March 10, 2026
மீண்டும் திமுக கூட்டணியில் பஞ்சாயத்து

திமுக கூட்டணியில் மீண்டும் தொகுதிப் பங்கீட்டு பிரச்னை வெடித்துள்ளது. 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுகவிற்கு தற்போது 4 சீட் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக கூறிவிட்டதாம். இதனையடுத்து, அவசர உயர்நிலைக் குழுக் கூட்டம் நாளை நடைபெறும் என்று வைகோ சற்றுமுன் அறிவித்துள்ளார். அக்கூட்டத்தில் எடுக்கும் முடிவை பொறுத்து, கடைசி நேரத்தில் கூட்டணி கூட மாறலாம் என கூறப்படுகிறது.
News March 10, 2026
விவசாயிகளுக்கு 80% மானியம் தரும் அரசு திட்டம்

விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் வாங்க SMAM Subsidy Scheme மூலம் மத்திய அரசு 40% – 80% வரை மானியம் வழங்குகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகும் போது www.agrimachinery.nic.in -ல் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் மாநில வேளாண்மைத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும் & சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும். நீங்கள் தகுதி பெற்றால் Mobile No.-க்கு SMS வரும். SHARE.
News March 10, 2026
அதிமுக கூட்டணியில் விஜய்? அண்ணாமலை கூறினார்

தவெகவுடன், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் உடனான கூட்டணி பேச்சு குறித்து நயினார் நாகேந்திரன் ஏற்கெனவே இல்லை என விளக்கம் அளித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். முன்னதாக, AP DCM பவன் கல்யாண் மூலமாக NDA தரப்பு விஜய்யுடன் பேசி வருவதாக நேற்று பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


