News May 25, 2024
மயிலாடுதுறை:தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் (கிக்) பதிவு செய்வதற்கான சிறப்பு உதவி மையம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் மயிலாடுதுறை வேலாயுதம் நகரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மே 23 முதல் ஜூன் 14 வரை காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். தொழிலாளர்கள் இந்த மையத்தை அணுகி கிக் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் வசந்தகுமார் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News August 19, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேதிகள் அறிவிப்பு

மயிலாடுதுறையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் கடந்த ஜூலை முதல் கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தற்போது மயிலாடுதுறையில் இரண்டாம் கட்ட முகாம் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஆகஸ்டு 21, 22 மற்றும் செப்டம்பர் 6, 10, 11 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையில் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 19, 2025
ஐஓபி வங்கி சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள்

மயிலாடுதுறை பட்டமங்கலம் தெருவில் உள்ள ஐஓபி வங்கி, ரூரல் செல்ஃப் எம்பிளாய்மென்ட் ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட் உடன் இணைந்து, தையல், அழகுக்கலை, ஓட்டுநர் பயிற்சி மற்றும் கைபேசி சரிபார்த்தல் போன்ற பல இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. மதிய உணவுடன் வழங்கப்படும் இந்த அரிய வாய்ப்பை, ஆர்வமுள்ளோர் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வகுப்புகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, மயிலாடுதுறை ஐஓபி வங்கியைத் தொடர்புகொள்ளலாம்.
News August 19, 2025
மயிலாடுதுறை இரவு ரோந்து பணி போலிசாரின் விவரங்கள் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மயிலாடுதுறை குத்தாலம் சீர்காழி செம்பனார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.