News May 25, 2024
ராம்நாடு: பெட்ரோல் குண்டுவீச்சு… போலீஸ் குவிப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள செட்டியமடை கிராமத்தில் கடந்த 14ஆம் தேதி ஆலய திருவிழா நடந்தது. இதில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மீண்டும் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். அப்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவாடானை டிஎஸ்பி நிரேஷ் தலைமையிலான போலீசார் குவிக்கப்பட்டு சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
Similar News
News September 12, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளைய முகாம் விவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களின் குறைகளை கோரிக்கைகளாக பெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நாளை (செப்.13) நடைபெறுகிறது. மண்டபம் வட்டாரம் – மானங்குடி, பஞ்சாயத்து அலுவலகத்தில் முகாம் நடைபெறுகிறது. ஆதார் அட்டை திருத்தம், குடும்ப அட்டை திருத்தம், பட்டா மாற்றம் போன்ற தங்களின் கோரிக்கைகளை முகாமில் மனுவாக அளிக்கலாம்.
News September 12, 2025
பரமக்குடி அருகே அரசு பேருந்துகள் மோதி விபத்து

பரமக்குடி அருகே மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருவரங்கி அருகே அரசு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து, பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 12, 2025
ராமநாதபுரத்திற்கு வருகை தரும் செல்வ பெருந்தகை

வாக்கு திருட்டை தடுக்க அகில இந்திய மீனவர் காங். சார்பில் பொதுக்கூட்டம் ராமநாதபுரம் அரண்மனை திடலில் நாளை (13.9.2025) மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் Ex. உள்துறை, நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வ பெருந்தகை MLA ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர். அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஏற்பாடு செய்துள்ளார்.