News May 25, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: வான்சிறப்பு ▶ எண்: 13
▶குறள்:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
▶பொருள்:
நான்கு புறமும் கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், உரிய காலத்தில் மழைநீர் பொய்த்து விட்டால், பசியின் கொடுமை நிலைத்து நின்று, பல்லுயிர்களை வாட்டி வதைக்கும்.
Similar News
News March 5, 2026
BREAKING: விபத்தில் சிக்கிய இந்திய விமானம்?

அசாமில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படையின் போர் விமானம் Sukhoi Su-30MKI விபத்தில் சிக்கியதாக சந்தேகம் எழுந்துள்ளது. கவுகாத்தியில் இருந்து புறப்பட்ட விமானம், மாலை 7 மணியளவில் கர்பி அங்லாங்கில் உள்ள சோகிஹோலா அருகே ரேடாரில் இருந்து மறைந்து மாயமானது. அது விபத்தில் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், தேடும் பணியை விமானப்படை தீவிரப்படுத்தியுள்ளது.
News March 5, 2026
தமிழக கவர்னர் மாற்றமா?.. பரபரப்பு தகவல்

தமிழ்நாடு கவர்னர் R.N.ரவியை மே.வங்க கவர்னராக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக <<19307017>>மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்<<>>. R.N.ரவியை மாற்ற வேண்டுமென்று திமுக நீண்டகாலமாக கோரி வந்த நிலையில், 5 ஆண்டுகால ஆட்சி முடிவில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மே.வங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்பாரா அல்லது நிரந்தரமாக மாற்றமா என்பதும் தெரியவில்லை.
News March 5, 2026
ஈரானுக்காக ரஷ்யா- சீனா வரவில்லை.. இதான் காரணமா?

இஸ்ரேலும், USA உடனான போரில் ஈரானின் கூட்டாளிகளான ரஷ்யாவும், சீனாவும் கண்டனம் தெரிவித்ததோடு சரி, ராணுவ ரீதியாக உதவ முன்வரவில்லை. ஏற்கெனவே உக்ரைனுடன் போர்புரிந்து வருகிறது ரஷ்யா. அதனால் மற்றொரு போர் வேண்டாம் என அந்நாடு ஒதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் சீனா USA-வை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை, மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கையில் தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.


