News May 24, 2024
கிர்கிஸ்தானை விட்டு வெளியேறும் மாணவர்கள்

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் சர்வதேச மாணவர்களைக் குறிவைத்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள், தங்கள் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் அச்சத்தில் கிர்கிஸ்தானை விட்டு தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
Similar News
News August 23, 2025
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நியமனம்

இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும் இவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான தூதராகவும் செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். இவர் அரசுப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டதாகவும் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், கடந்த ஜன.20 முதல் ஜோர்கன் கே ஆண்ட்ரூஸ் இந்தியாவில் உள்ள USA தூதரகத்தின் இடைக்கால பொறுப்பாளராக உள்ளார்.
News August 23, 2025
கூட்டணி ஆட்சி குழப்பம்.. அதிமுக மா.செக்கள் கூட்டம்

ஆக.30-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்ததில் மூத்த நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், இக்கூட்டம் நடைபெறவுள்ளது. அத்துடன் நேற்று நடைபெற்ற BJP பூத் கமிட்டி மாநாட்டில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என அமித்ஷா பேசியது மீண்டும் கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.
News August 23, 2025
FIFA உலகக் கோப்பை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட டிரம்ப்

FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை USA, கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் நடத்துகின்றன. இப்போட்டிகள் 16 மைதானங்களில் நடைபெறுகின்றன. கடைசியாக 1994-ல் இத்தொடரை USA நடத்தியிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து FIFA தலைவர் ஜியானி இன்ஃபாண்டினோ உடன் டிரம்ப் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த போட்டிகளைக் காண ரஷ்ய அதிபர் புடின் வரலாம் எனவும் தெரிவித்தார்.