News May 24, 2024

தலைமை காவலர் காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு

image

சென்னை ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலரின் காலில், துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் துப்பாக்கியை சரிபார்க்கும் போது உதவி ஆய்வாளர் தவறுதலாக விசையை அழுத்தியதில், எதிரே இருந்த தலைமை காவலர் சிவக்குமாரின் கால் முட்டியில் குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் விசாரிக்கின்றார்.

Similar News

News March 9, 2026

சென்னையில் கம்பி எண்ணும் இன்ஸ்டா பிரபலம்!

image

காசிமேட்டை சேர்ந்தவர் கவின் (25). இவர், காசிமேடு மீனவன் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீட்டுக்கு சென்ற போது சாலையில் நின்று கொண்டிருந்த 15 வயது சிறுமியின் மீது மோதியுள்ளார். அதை தட்டிக்கேட்ட சிறுமியின் தந்தையையும் கவின் தாக்கியுள்ளார். தகவல் அறிந்து வந்த காசிமேடு போலீசார் கவினை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 8, 2026

சென்னை: ரேஷன் கடைக்கு செல்ல வேண்டாம்! இந்த நம்பர் போதும்!

image

சென்னை மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News March 8, 2026

சென்னை: தீராத நோய் எல்லாம் தீர இங்கு போங்க!

image

திருவான்மியூரில் அமைந்துள்ளது அருள்மிகு மருந்தீஸ்வரர் ஆலயம். வசிஷ்டமுனிவரின் பூஜைக்காக, இந்திரன் காமதேனுவை உடன் அனுப்பிய போது, காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்ய, முனிவர் அதனை சபித்தார். காமதேனு, இந்த கோயிலிலுள்ள வன்னி மரத்தடி சிவனை வணங்கி விமோசனம் பெற்றது. இங்கு பாலாபிஷேம செய்து வழிபட்டால், தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. முக்தி கிடைக்க இங்கு போய் வழிபடுங்க. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!