News May 24, 2024
4 மாவட்டங்களில் கனமழை

தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நெல்லை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்துள்ளனர். இதனிடையே சேலம், ஈரோடு உள்பட 11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News March 11, 2026
முடிவை மாற்றினார் OPS

ராமநாதபுரம் MP நவாஸ் கனிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி, OPS சென்னை HC-யில் OPS மனு தாக்கல் செய்துள்ளார். 2024-ல் NDA சார்பில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த OPS, நவாஸ் கனியின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு தொடுத்தார். இவ்வழக்கில் 2 முறை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்த OPS, தற்போது திமுகவில் இணைந்ததால் அவ்வழக்கை வாபஸ் பெறுகிறார்.
News March 11, 2026
தினமும் தேங்காய் பால் குடிப்பதால் என்ன ஆகும்?

தினமும் தேங்காய் பால் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. ➤நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும், அடிக்கடி ஏற்படும் சளி, நுரையீரல் பிரச்னைகள் சரியாகும், வயிற்றுப் புண், வயிற்றுப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். ➤இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் & இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. ➤பால் ஒவ்வாமை இல்லாதவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் இதை குடிக்க வேண்டும் என டாக்டர்கள் சொல்றாங்க. SHARE.
News March 11, 2026
பத்தாயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கட்!

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் பங்கேற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தை நடைபெற்றதை அடுத்து ஜன.31- ம் தேதியுடன் போராட்டத்தை ஆசிரியர்கள் வாபஸ் பெற்றனர். எனினும் அரசு அறிவுறுத்தியும் இன்னும் தங்களின் ஜனவரி மாத சம்பளம் கிடைக்காதது சுமார் 10,000-க்கும் அதிகமான ஆசிரியர்களிடையே அதிருப்தியை அளித்துள்ளது.


