News May 24, 2024

பசியோடு இருக்கும் போது கோபம் வருவது ஏன்?

image

பசியோடு இருப்போருக்கு கோபம் அதிகம் வருவதை பார்த்திருப்போம். இதற்கு பல காரணங்களை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பசியோடு இருக்கையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால், ஹார்மோன் அட்ரிலின், கார்டிசோல் சுரந்து அதை சரி செய்யும், அப்போது எரிச்சல் ஏற்படும் என அவர்கள் கூறுகின்றனர். சர்க்கரை அளவு குறைகையில் மூளை நியூரோபெப்டைட் ஒய் ரசாயனத்தை சுரப்பதாலும் கோபம் வருவதாக தெரிவிக்கின்றனர்.

Similar News

News March 19, 2026

இவர்கள் வீட்டில் இருந்தே ஓட்டு போடலாம்

image

85 வயதுக்கு மேற்பட்டோர், 40%க்கும் மேல் மாற்றுத்திறனாளிகள் & வீட்டிலிருந்தே சிகிச்சை பெறுவோர் <<19426015>>தபால் வாக்களிக்கலாம்<<>>. தேர்தல் அறிவிப்பு வெளியான 5 நாள்களுக்குள் படிவம் 12D-ஐ பூர்த்தி செய்து தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்ட பின், அதிகாரிகள் வாக்காளரின் வீட்டிற்கு சென்று தபால் வாக்கை பதிவு செய்து கொள்வார்கள். SHARE IT.

News March 19, 2026

இந்தியாவின் வீர மகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

காஷ்மீரில் நாட்டை காக்கும் பணியில் இருந்த மக்கள் நாயகன் ஒருவரை தாய்த்திரு நாடு இழந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி சந்தீப் குமார் தாக்கா, பூஞ்ச் மாவட்டத்தின் எல்லையோர பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது மரணமடைந்தார். இதையடுத்து, அந்த வீரனுக்கு ராணுவ மரியாதை செய்யப்பட்டு, தேசியக்கொடி போர்த்திய உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. RIP

News March 19, 2026

பத்திரிகையாளர்களுக்கும் தபால் வாக்கு: ECI

image

வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு (ஏப்.23) 15 நாள்களுக்கு முன்பே பூத் நிலை அலுவலர்கள் (BLO) மூலம் முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தலாம் என ECI தெரிவித்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களும் தபால் வாக்கு செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தபாலில் வாக்களிப்போர் தபால் செலவை ஏற்க வேண்டிய தேவையில்லை என்றும் ECI தெரிவித்துள்ளது.

error: Content is protected !!