News May 24, 2024
பதிப்பகங்களுக்கு ஆர்டர் தராதது ஏன்? அரசு விளக்கம்

பதிப்பகங்களுக்கு புதிய ஆர்டர் தராதது குறித்து நூலகத்துறை இயக்குநர் இளம் பகவத் விளக்கம் அளித்துள்ளார். முந்தைய நடைமுறையில், அட்டையை மட்டும் மாற்றிவிட்டு பழைய புத்தகத்தை விற்ற தவறுகள் நடந்தது, இதுபோன்ற தவறை சரி செய்ய புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இனி ஆண்டுக்கு ஒருமுறை அல்லாமல், 3 மாதங்களுக்கு ஒருமுறை புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
Similar News
News August 18, 2025
ஏர்டெல் ஆஃபர்.. இனி இசை மழையில் நனையலாம்!

ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ஆஃபர் கொடுத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். APPLE MUSIC சேவையை 6 மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ஏர்டெல் அறிவித்துள்ளது. MY AIRTEL APP-ல் சென்று வாடிக்கையாளர்கள் இதனை உறுதி செய்து கொள்ளலாம். 6 மாதத்திற்கு பிறகும் இந்த சேவையை தொடர விரும்பினால், மாதம் ₹119 கட்டணம் செலுத்த வேண்டும். இசை மழையில் நனைய தயாரா..!
News August 18, 2025
மானியத்துடன் ₹1 கோடி கடன் திட்டம் நாளை தொடக்கம்

முன்னாள் ராணுவ வீரர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கத்துடன் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30% மானியத்துடன் ₹1 கோடி வரை வங்கி கடன் பெற முடியும். இந்த திட்டத்தில் பயன்பெற www.exwel.tn.gov.in இணையதளத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், பயனாளிகளுக்கு கடன் வழங்கும் வகையில் திட்டத்தை நாளை CM ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
News August 18, 2025
யானையும் டிராகனும் ஒன்றிணையுமா?

இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இதுபற்றி பேசிய EAM ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கு இடையேயான வித்தியாசம், தகராறாக மாறக் கூடாது என்றார். மேலும், நாம் விரும்புவது நியாயமான, பலதுருவ உலக ஒழுங்கை தான் (பலதுருவ ஆசியா உள்பட). உலகப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை கொண்டுவர இது அவசியமாகும் என்றும், இந்த சந்திப்பு பரஸ்பரம் பலன் தரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.