News May 24, 2024

பதிப்பகங்களுக்கு ஆர்டர் தராதது ஏன்? அரசு விளக்கம்

image

பதிப்பகங்களுக்கு புதிய ஆர்டர் தராதது குறித்து நூலகத்துறை இயக்குநர் இளம் பகவத் விளக்கம் அளித்துள்ளார். முந்தைய நடைமுறையில், அட்டையை மட்டும் மாற்றிவிட்டு பழைய புத்தகத்தை விற்ற தவறுகள் நடந்தது, இதுபோன்ற தவறை சரி செய்ய புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இனி ஆண்டுக்கு ஒருமுறை அல்லாமல், 3 மாதங்களுக்கு ஒருமுறை புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Similar News

News November 22, 2025

மாதம் ₹3,000 கொடுக்கும் அரசு.. உடனே அப்ளை பண்ணுங்க

image

வீட்டு வேலை, கட்டட வேலை, விவசாய கூலி உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களும் தங்களது 60 வயதிற்கு பிறகு மாதந்தோறும் ₹3,000 ஓய்வூதியம் பெற முடியும். இதற்கு மத்திய அரசின் <>eshram.gov.in<<>> இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலே உள்ள லிங்கிற்கு சென்று உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை உள்ளிட்டு, பெயர், முகவரியை பதிவு செய்து e-SHRAM ஐடி கார்டை பெறுங்கள்.

News November 22, 2025

இன்று 13 மாவட்டங்களில் கனமழை

image

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான நிலையில், இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நாளையும், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை மறுநாளும் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

News November 22, 2025

இனி அரசல் புரசல் இருக்காது: ப.சிதம்பரம்

image

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அமைத்திருப்பதை ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். இது INDIA கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும், அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுடன் <<18302354>>காங்கிரஸ்<<>> கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!