News May 24, 2024
தமிழக கேரள எல்லையில் மே 26ஆம் தேதி முற்றுகை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி ஆற்றின் துணை ஆறான சிலந்தி ஆற்றில் வட்டவடாவில் கேரளா அரசு தற்போது தடுப்பணை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால் அதை தடுத்து நிறுத்த நாளை மறுநாள் (மே 26) காலை 10 மணிக்கு சின்னாறு சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.
Similar News
News November 5, 2025
திருப்பூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்

திருப்பூர் அரிசி கடைவீதியைச் சேர்ந்த நந்தினி. கடந்த 4 மாதங்களாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரை காதலித்து வந்துள்ளார். ராமமூர்த்தியின் செயல்பாடு பிடிக்காததால் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் நேற்று ராமமூர்த்தி பேச மறுத்த நந்தினியை பின் தொடர்ந்து வீட்டிற்குச் சென்று கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
News November 5, 2025
திருப்பூர்: ரயில்வே வேலை! APPLY NOW

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் www.rrbchennai.gov.in என்ற தளத்தில் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.25,500-ரூ.35400 வழங்கப்படும். கடைசி தேதி : 20.11.2025ஆகும். இத்தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.
News November 5, 2025
திருப்பூர்: ரேஷன் கடையில் கைரேகை வேலை செய்யலையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <


