News May 24, 2024
புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி

தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன் உத்தரவில், தென்காசி, அரக்கோணம், பெரம்பலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், மத்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் இந்த கல்லூரிகளுக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணவும் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News August 18, 2025
பள்ளி மாணவர்கள் நெரிசல் இல்லாமல் பஸ்ஸில் போகலாம்!

மாணவர்கள் அரசு பஸ்களில் நெரிசலின்றி பள்ளிக்கு செல்லும் திட்டத்தை சென்னையில் DCM உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, 25 பள்ளிகளில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, காலையில் பள்ளி மாணவர்களை மட்டும் ஏற்றிவிட்டு பள்ளி வளாகத்திற்குச் செல்லும் மாநகர பஸ்கள், மாலையில் அதே வழித்தடத்தில் சென்று அவர்கள் பகுதியில் இறக்கிவிடும். தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருமா?
News August 18, 2025
நான் இறந்துவிட்டேன்.. கல்லூரி மாணவர் விபரீத முடிவு

‘நீங்கள் இதை படிக்கிறீர்கள் என்றால், நான் இறந்துவிட்டேன் என அர்த்தம். எனது மரணம் என் சொந்த முடிவு. ஓராண்டாக திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளேன்.’ நொய்டாவில் தற்கொலை செய்த மாணவர் சிவம் டே(24) எழுதிய வரிகள் இவை. மாணவன் 2 ஆண்டுகளாக கல்லூரிக்கு வரவில்லை எனவும், அதனை கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News August 18, 2025
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியா? திருச்சி சிவா பதில்

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக திமுகவின் திருச்சி சிவாவை களமிறக்க ‘INDIA’ கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது வரை யாரும் பரிசீலனையில் இல்லை என INDIA கூட்டணி தரப்பு கூறியது. டெல்லியில், வேட்பாளர் தேர்வுக்கான ஆலோசனை கூட்டத்தையும் INDIA கூட்டணி கூட்டியுள்ளது. இதனிடையே, வேட்பாளர் தேர்வு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார்.