News May 24, 2024

திருவள்ளூர் அருகே பௌர்ணமி பூஜை: திரண்ட பக்தர்கள்

image

ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் பொன்னியம்மன் கோவிலில் நேற்று பௌர்ணமி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை 8 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு பௌர்ணமி தீபாரதனையுடன் அம்மனுக்கு சிறப்பு ஆலாபனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜை நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News

News July 7, 2025

திருவள்ளூர் மக்களே உங்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

திருவள்ளூர் காவல் துறை தனது சமூக வலைத்தளத்தில் வேலை வாய்ப்பு மோசடிகள் பொதுவாக உண்மையான வேலை வாய்ப்புகளைப் போல தோன்றும், ஆனால் அவை பணம், மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடி மோசடிகளில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் இது போன்ற மோசடிகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை பதிவு வெளியிட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News July 7, 2025

திருவள்ளூரில் பொறியியல் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

image

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொறியியல் கல்லூரி மாணவ மாணவியருக்கான திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

News July 7, 2025

திருவள்ளூரில் மகளிருக்கான தொழில் விழிப்புணர்வு

image

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஜூலை 10ம் தேதி நடைபெறும் மகளிருக்கான தொழில் நெறிவழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மகளிர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!