News May 23, 2024

நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

image

வெம்பக்கோட்டை மற்றும் ஏழாயிரம்பண்ணை சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் சிறு பட்டாசு ஆலைகளை குறிவைத்து பட்டாசு விதிமீறல் ஆய்வு குழுக்கள் ஆய்வு நடத்தப்பட்டு வருவதை கண்டித்து தமிழக பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இச்சங்கத்தின் கீழ் இயங்கும் 150 பட்டாசு ஆலைகளை மூட முடிவு செய்துள்ளனர்.

Similar News

News October 13, 2025

ராஜபாளையத்தில் கடித்து குதறிய கரடி

image

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்த முத்து(45) ராஜபாளையத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று சுந்தரராஜபுரம் பகுதியில் உள்ள நிலாப் பாறை காட்டுப்பகுதியில் காவலர்களுடன் ரோந்து சென்ற போது கரடி ஒன்று இவரை தாக்கி தொடைப்பகுதியில் கடித்து குதறியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் கரடியை விரட்டிய நிலையில் முத்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News October 13, 2025

விருதுநகரில் ஒரு வாரத்தில் அகற்ற கெடு

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்கம்பங்கள், மின் வாரியத்திற்கு சொந்தமான உடைமைகள் மீது கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்கள், விளம்பர தட்டிகளால் ஊழியர்களால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. மேலும் இதனால் மின்விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒரு வாரத்திற்குள் இவை அனைத்தையும் அகற்ற வேண்டும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.

News October 13, 2025

JUST IN விருதுநகருக்கு கனமழை எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று(அக்.13) விருதுநகர், மதுரை,தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஒரு வாரம் தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீபாவளியன்று கனமழை இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT

error: Content is protected !!