News May 23, 2024
விட்டு விட்டு பெய்யும் கனமழை

தமிழகத்தில் பல பகுதிகளில் இரவிலும் கனமழை பெய்து வருகிறது. காலையில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அந்த வகையில், ராமநாதபுரம், திண்டுக்கல், நெல்லை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தற்போது மழை பெய்கிறது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே, கோடை மழை முடியும் வரை நீர்நிலை, மின்சாரக் கம்பங்கள் அருகில் மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News March 28, 2026
மாவீரன் நெப்போலியன் பொன்மொழிகள்!

▶ கற்பனை வளமே இந்த உலகை ஆள்கிறது. ▶காலத்தின் அருமையை புரிந்து கொள்ளாதவர்கள் வெற்றி அடைய முடியாது.
▶முன்னேற்றத்தை நோக்கி அடி எடுத்து வையுங்கள் அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை.
▶இழந்த இடத்தை பிடித்துக்கொள்ளலாம், ஆனால் இழந்த காலத்தை ஒருபோதும் பிடிக்க முடியாது.
News March 28, 2026
புதிய அவதாரம் எடுக்கும் அஸ்வின்

IPL 2026-ல் அஷ்வின் ஒரு புதிய அவதாரம் எடுத்துள்ளார். முதல் முறையாக, அவர் ஜியோஸ்டார் குழுவின் சார்பாக வர்ணனையாளர் மைக்கை பிடிக்க இருக்கிறார். இந்தக் குழுவில் சேவாக், டி வில்லியர்ஸ் மற்றும் ரெய்னா போன்றவர்களுடன் அவரும் இணைந்து வர்ணனை செய்ய உள்ளார். அஸ்வின் பந்துவீச்சு போன்ற வார்த்தைகளிலும் ஜாலம் செய்யக்கூடியவர் என்பதால் அவர் வர்ணனையில் தனது முத்திரையை பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News March 28, 2026
விரக்தியாக இருந்தால் இதை செய்யலாம்!

நீங்கள் கோபமாகவோ அல்லது விரக்தியாகவோ உணரும்போது, அதை மற்றவர்கள் மீது காட்டாமல் வீட்டு வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது, பொருள்களை நேர்த்தியாக அடுக்கி வைப்பது ஆகியற்றை செய்வதன்மூலம் ரிலாக்ஸ் ஆகலாம். இது வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவுவதோடு உங்கள் கோபத்தை போக்கவும் உதவும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.


