News May 23, 2024
லாலு பிரசாத் மகள் மீது வழக்குப்பதிவு

பிஹாரின் சரண் தொகுதியில் 5ஆவது கட்ட வாக்குப்பதிவின் போது, பாஜக மற்றும் ஆர்ஜேடி தொண்டர்கள் மத்தியில் மோதல் வெடித்தது. இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், அத்தொகுதியின் ஆர்ஜேடி வேட்பாளரும், லாலு பிரசாத்தின் மகளுமான ரோகினி ஆச்சார்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் வாக்குச்சாவடிக்கு சென்றபோது, இரு தரப்பும் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.
Similar News
News November 22, 2025
ராசி பலன்கள் (22.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 22, 2025
PM மோடி மீனவர்களை சந்திக்கவில்லை: CM ஸ்டாலின்

ராமேஸ்வரம் வரை வந்தும் தங்களை PM மோடி சந்திக்கவில்லை என்று மீனவர்கள் வருந்தியதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால், தான் கடலோர மாவட்டங்களுக்கு எப்போது வந்தாலும் மீனவர்களை சந்திப்பேன் என்றும் CM குறிப்பிட்டுள்ளார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சந்திக்கும் இன்னல்களை தவிர்க்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News November 22, 2025
பிரபல தமிழ் நடிகை மரணம்.. அதிர்ச்சித் தகவல்

தவசி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரதியுஷா மரண வழக்கு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. 2002-ல் காதலருடன் விஷமருந்தி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது மகள் கேங்க் ரேப் செய்யப்பட்டதாக பிரதியுஷாவின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது மார்பு, தொடை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். <<18341222>>நடிகையின் மரணம் தொடர்பான வழக்கு<<>> நேற்று SC-ல் விசாரணைக்கு வந்திருந்தது.


