News May 23, 2024
பட்டாசு ஆலைகள் நாளை முதல் வேலை நிறுத்தம்

சிவகாசியில் 150க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள், நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி வெடி விபத்து நடப்பதால் சிவகாசியில் உள்ள ஆலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களது நடவடிக்கையை கண்டித்து வேலை நிறுத்தம் செய்வதாக தமிழன் பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது.
Similar News
News November 22, 2025
தமிழகத்தை பாஜக வஞ்சிக்கிறது: கனிமொழி

ஒவ்வொரு மசோதாக்களின் மூலமாகவும் மாநில உரிமைகளை பறிப்பதிலேயே பாஜக அரசு கவனம் செலுத்தி வருவதாக கனிமொழி MP குற்றம்சாட்டியுள்ளார். மாநிலங்களுக்கு சரியான நிதி பகிர்வை வழங்குவதில்லை என குற்றம்சாட்டிய அவர், மெட்ரோ உள்பட நமக்கு வரவேண்டி ரயில் திட்டங்கள் வருவதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசை, பாஜக தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும், அதனை எதிர்த்து திமுக போராடுகிறதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 22, 2025
வரலாற்றில் இன்று

➤1939 – உ.பி Ex CM முலாயம் சிங் யாதவ் பிறந்த தினம்.
➤ 1956 – 16-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆத்திரேலியா மெல்பேர்ணில் தொடங்கியது.
➤1963 – அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.
➤ 1995 – உலகின் முதலாவது கணினி அனிமேஷன் படமான டாய் ஸ்டோரி வெளியானது.
➤ 2002 – நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
News November 22, 2025
SPORTS 360°: WC மகளிர் கபடியில் இந்தியாவுக்கு 4-வது வெற்றி

*ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, இந்தோனேசியாவிடம் தோல்வியடைந்தது. *மகளிர் உலகக்கோப்பை கபடியில் உகண்டா அணியை வீழ்த்திய இந்தியா 4-வது தொடர் வெற்றியை பெற்றது. *அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் 367 ரன்கள் முன்னிலை பெற்று வங்கதேசம் வலுவான நிலையில் உள்ளது. *ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.


