News May 23, 2024
20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்

தமிழகத்தில் சில மாவட்டங்களில் இரவிலும் கனமழை தொடர்வதால் மக்கள் கடும் இன்னலைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக ராமநாதபுரம், திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சுமார் 1 மணி நேரமாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 15, 2025
எங்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம்: பிரேமலதா

திரையுலகில் இருந்து வந்த விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடுவது இயல்பான ஒன்றுதான்; நாங்கள் விஜயகாந்தை பார்த்து வளர்ந்தவர்கள். எங்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். சரியான திட்டமிடல் இல்லாமல் விஜய் பரப்புரை செய்ததாக கூறிய அவர், விஜயகாந்தை மற்றவர்களுடன் (விஜய்) ஒப்பிட்டு பேசுவது தவறு என்றும், தொண்டர்களின் விருப்பப்படி கூட்டணி அமையும் எனவும் தெரிவித்தார்.
News September 15, 2025
கமல் சொன்ன ‘கிரியா ஊக்கி’ அர்த்தம் தெரியுமா?

‘கிரியா ஊக்கி’ – இன்று அதிகம் தேடப்படும் சொல்லாக உள்ளது. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், இச்சொல்லை பயன்படுத்தியுள்ளார். கிரியை என்பதற்கு செயல் என்று பொருள். அப்படியானால், ‘கிரியா ஊக்கி’ என்பதை செயல்படுவதற்கான ஊக்கம், செயலூக்கம் என பொருள் கொள்ளலாம். அரசியலில் தனக்கு உந்துதலாக, தொடர்ந்து உழைக்க உத்வேகம் கொடுப்பவர் அண்ணா எனக் குறிப்பிட்டு இச்சொல்லை பயன்படுத்தியுள்ளார் கமல்.
News September 15, 2025
வாரத்தின் முதல் நாளிலேயே சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிவுடன், 81,785-ல் நிறைவடைந்தது. அதே நேரத்தில் நிஃப்டி 44 புள்ளிகள் சரிந்து 25,069-ல் வர்த்தகம் முடிந்துள்ளது. DLF, ஏபிபி இந்தியா, HDFC வங்கி உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிந்துள்ளன. அதேநேரம் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், இன்ஃபோசிஸ், வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் உள்ளிட்டவைகளின் பங்குகள் உயர்ந்துள்ளன.