News May 23, 2024

பங்குச் சந்தை உச்சத்தை எட்டியதன் காரணங்கள்

image

இந்திய பங்குச் சந்தை உச்சத்தை எட்டியதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றாலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து வாங்கி வருகின்றனர். மத்திய அரசுக்கு RBI ₹2.11 லட்சம் கோடி ஈவுத்தொகை தருவதாக அறிவித்தது சந்தையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. Technical Factorஇன் படி 22,800 என்ற வலுவான தடையை நிஃப்டி உடைத்ததும் காரணமாக சொல்லப்படுகிறது.

Similar News

News August 16, 2025

போர்களின்போது பாலியல் துன்புறுத்தல்கள் 25% அதிகரிப்பு

image

மனிதம் கொஞ்சம் கொஞ்சமாக செத்து வருவதற்கு இந்த அறிக்கையே சாட்சி. கடந்த ஆண்டில் நடைபெற்ற போர்கள் & உள்நாட்டு மோதல்களின்போது சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் 25% அதிகரித்துள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது. இதில் 63 அரசு & NGO அமைப்புகளுக்கு தொடர்புள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொடுமைகள் காங்கோ, சோமாலியா, தெற்கு சூடான், ஆப்பிரிக்க குடியரசு ஆகிய நாடுகளில் அரங்கேறியுள்ளன.

News August 16, 2025

BREAKING: ஆக.19-ல் NDA கூட்டணி MP-க்கள் கூட்டம்

image

PM மோடி தலைமையில் NDA கூட்டணி MP-க்கள் கூட்டம் ஆக.19-ல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு அன்றைய தினமே வேட்பாளர் அறிவிப்பு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

News August 16, 2025

SRH அணியில் பாண்ட்யா..? பதான் சொன்ன ரகசியம்

image

SRH ஆலோசகராக VVS லக்‌ஷ்மன் இருந்தபோதே, பாண்ட்யாவின் திறமையை கூறி அணியில் எடுக்க சொன்னதாக பதான் நினைவுகூர்ந்துள்ளார். ஆனால், பாண்டியாவின் திறமை குறித்து வெளியில் அதிகம் பேசப்படாததால், அவரை லக்‌ஷ்மன் அணியில் எடுக்கவில்லை எனவும், அதற்காக தற்போது வரை அவர் புலம்பி வருவதாகவும் பதான் பகிர்ந்துள்ளார். 2015-ல் ₹10 லட்சத்திற்கு MI-ஆல் வாங்கப்பட்ட பாண்டியா, தற்போது அந்த அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார்.

error: Content is protected !!