News May 23, 2024

பங்குச் சந்தை உச்சத்தை எட்டியதன் காரணங்கள்

image

இந்திய பங்குச் சந்தை உச்சத்தை எட்டியதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றாலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து வாங்கி வருகின்றனர். மத்திய அரசுக்கு RBI ₹2.11 லட்சம் கோடி ஈவுத்தொகை தருவதாக அறிவித்தது சந்தையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. Technical Factorஇன் படி 22,800 என்ற வலுவான தடையை நிஃப்டி உடைத்ததும் காரணமாக சொல்லப்படுகிறது.

Similar News

News March 10, 2026

உக்ரைனிடம் உதவி கேட்ட அமெரிக்கா

image

கடந்தாண்டு ஏவுகணைகள் கேட்ட ஜெலன்ஸ்கியை டிரம்ப் வெளிப்படையாக விமர்சித்து உதாசீனப்படுத்தினார். ஆனால் தற்போது, ஈரானின் Shahed ட்ரோன்களை சமாளிக்க முடியாமல் உக்ரைனின் உதவியை நாடியுள்ளார். மில்லியன் கணக்கில் செலவழித்து ஓய்ந்துபோன அமெரிக்கா, தற்போது ட்ரோன்களை எதிர்கொள்ளும் அனுபவம் கொண்ட உக்ரைனிடம் சென்றுள்ளது. ஒரு வருடத்திற்கு முன் உதவி கேட்ட நாடு, இன்று உதவி வழங்கும் நிலையில் உள்ளது.

News March 10, 2026

FLASH: விலை ₹65,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

மார்ச் மாத சலுகையாக Skoda நிறுவனம் தனது கார்களின் விலையை குறைத்துள்ளது. அந்நிறுவனம் பல்வேறு மாடல் காருக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. கார் வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்கு இது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. எந்தெந்த மாடல் காருக்கு எவ்வளவு சலுகை என்பதை மேலே உள்ள போட்டோஸை இடது பக்கமாக SWIPE செய்து பாருங்க.

News March 10, 2026

பெட்ரோல், டீசல் விலை ரூ.22 உயர்வு… எங்கு தெரியுமா?

image

ஈரான் போர் காரணமாக இந்தியா உள்பட உலகில் பல நாடுகளிலும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு இப்போதே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலைகளையும் லிட்டருக்கு (இலங்கை கரன்சியில்) ரூ.22 உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் எரிபொருள் விலை உயராது என அரசு அறிவித்துள்ளது நிம்மதி அளித்தாலும், சர்வதேச நிலைமைகளால் சூழல் மாறலாம்.

error: Content is protected !!