News May 23, 2024
ஆன்லைன் சூதாட்டம்: அரியலூர் வாலிபர் தற்கொலை

அரியலூர் மாவட்டம் குவாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவாசகன் . இவர் ஓசூர் தோட்டக்கிரி பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் இவர் ஈடுபட்டு 50 லட்சம் கடன் இருந்ததாக கூறி, மன உளைச்சலுக்கு ஆளான அவர் வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
அரியலூர்: காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

அரியலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினருக்கு, அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் புத்தாக்க பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3, 4வது பேட்ச் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு சிறந்து விளங்கி முதல், 2 மற்றும் 3-ம் இடம் பிடித்த காவல்துறையினரை அரியலூர் மாவட்ட எஸ்.பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி நேற்று (மார்ச் 03) தனது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
News March 4, 2026
அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 5 ரேஷன் கடைகள்!

அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா இன்று (மார்ச்- 04) பொய்யாதநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அதன்படி பொய்யாதநல்லூர், வெள்ளூர், சென்னிவனம், தேளூர், ஏழேரி உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக நியாயவிலை கடைகள் திறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 4, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.03) இரவு 10 முதல் நாளை (மார்ச்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


