News May 23, 2024

‘வெப் கேம்’ மூலம் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தின் ஒவ்வொரு மேஜையிலும் ‘வெப் கேமரா’ வைத்து கண்காணிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக ஆட்சியர் மகாபாரதி நேற்று(மே 22) தெரிவித்துள்ளார். மேலும் வாக்கு எண்ணும் பணிக்காக 630 அலுவலர்களும், ஒவ்வொரு வேட்பாளரும் தனியே முகவர்கள் நியமிக்க அனுமதிக்கப்பட்டு அனுமதி சீட்டுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 18, 2025

மயிலாடுதுறையின் பெயர் காரணம் இதுவா?

image

பார்வதி தேவியார் மயிலாக வடிவம் எடுத்து காவிரி ஆற்றுத்துறையில் ஆடி சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் குறிப்பிட பட்டுள்ளதால் இப்பகுதி மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. மேலும் 18 ஆம் நூற்றாண்டு வரை “மயூரபுரம்” என்றும் பின்பு “மாயவரம்” என்றும் அழைக்கப்பட்ட இந்நகரம் 1982ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது “மயிலாடுதுறை” என பெயர் மாற்ற அரசாணை வெளியிடப்பட்டது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 18, 2025

மயிலாடுதுறை: கடையில் தீ விபத்து: ஆறுதல் கூறிய எம்எல்ஏ

image

மயிலாடுதுறை மகாதான வீதியில் நேற்று தனியார் டைலர் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய நிவேதா எம் முருகன் நேரில் சென்று பாதிக்கப்பட்டவருக்குஅறிதல் கூறினார். உடன் மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் என் செல்வராஜ் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News August 17, 2025

மயிலாடுதுறை – தரங்கம்பாடியின் ரயில் சேவை!

image

மயிலாடுதுறை-தரங்கம்பாடி மீட்டர் கேஜ் ரயில் பாதை, பிரிட்டிஷ் அரசால் 1926-யில் திறக்கப்பட்டது. 36 கிமீ நீளம் கொண்ட இப்பாதை செம்பனார்கோயில், திருக்கடையூர், பொறையார் வழியாக சென்றது. இதன் மூலம் பொதுமக்கள் பெரிதும் பயன்பெற்று வந்தனர். ஆனால் வருவாய் குறைவின் காரணமாக 1986ம் ஆண்டு இந்த சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த சேவையை மீண்டும் தொடங்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!