News May 23, 2024
கனமழைக்கு 7 நாளில் 15 பேர் பலி

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 7 நாள்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், நெல், சோளம், பருப்பு, எள்ளு, கடலை உள்பட 4,385.40 ஹெக்டேர் பரப்பளவிலான விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மழையால் சேதமடைந்த வீடுகள், பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளது.
Similar News
News March 8, 2026
இந்த App உங்க ஃபோன்ல இருக்கா? முடிஞ்சுது போங்க!

ஓடிடி-யில் படம் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டதால் இதற்காகவே நெட்பிளிக்ஸ், ப்ரைம் அக்கவுண்ட்டுகளுக்கு பணம் செலுத்தி வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் இதற்கு பணம் செலுத்த முடியாதவர்கள், அதில் வரும் படங்களை இலவசமாக பார்க்கவேண்டும் என்பதற்காக Playstore-ல் இல்லாத ‘Net Mirror’ போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்கின்றனர். இதுபோன்ற செயலிகள் உங்கள் ஃபோனை ஹாக் செய்வதோடு அதிலுள்ள தகவல்களை திருடலாம். உஷார்!
News March 8, 2026
கூட்டணி விவகாரத்தில் கோட்டை விட்ட தவெக!

பவர் ஷேரிங் ஆப்சனை கொடுத்தும் எந்த கட்சியும் நம்முடன் வராதது ஏன் என மூத்த நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. விஜய்க்கு ஆதரவாக பேசிவந்த TTV தினகரன் முதல் ‘நம்ம வீட்டு பிள்ளை’ என பேசிய பிரேமலதா வரை எதிரெதிர் அணியில் ஐக்கியமாகினர். கடைசி வரை பேசி வந்த காங்கிரஸும் திமுகவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்துவிட்டது. இதனால், நாம் கோட்டை விட்டது எங்கே என விஜய் விளக்கம் கேட்டுள்ளாராம்.
News March 8, 2026
காமெடி நடிகர் கோரி பார்கர் காலமானார்.. குவியும் அஞ்சலி

‘Love Boat’, ‘Will & Grace’ உள்ளிட்ட பல தொடர்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த பிரபல நடிகர் கோரி பார்க்கர்(60) காலமானார். நடிப்பு மட்டுமின்றி மேடை நாடகத்திலும் நகைச்சுவை வேடங்களில் அசத்தி வந்த கோரி பார்க்கர், புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மை காலமாக திரைப்பிரபலங்கள் பலரும் கேன்சர் பாதிப்பால் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். So sad!


