News May 23, 2024

சவுக்கு சங்கர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

image

யூடியூப்பர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டபோது கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை மதுரை மாவட்ட போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமக்கு ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (23.05.2024) நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி வரும் மே 27ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Similar News

News July 10, 2025

குமரி – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்

image

ஜூலை.12 அன்று காலை 05:50 மணிக்குப் புறப்படும் கன்னியாகுமரி-ஹவுரா அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் எண் (12666) மதுரை கோட்டத்தில் பொறியியல் பணிகள் காரணமாக மதுரை மற்றும் திண்டுக்கல்லை தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக திருப்பி விடப்படும். மாற்று நிறுத்தங்கள் அருப்புக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகியவை அடங்கும்.

News July 10, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (09.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 9, 2025

அரசு விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு

image

எழுமலை அருகே எம்.கல்லுப்பட்டி அரசு பள்ளி மாணவர் விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவர்கள் 15 பேர் இன்று காலை விடுதியில் வழங்கப்பட்ட இட்லி, சாம்பார், சட்னி உணவை சாப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து எழுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ, தாசில்தார், சுகாதாரத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!