News May 23, 2024
மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தை சேர்த்தவர் மாரியப்பன் (53). இவருக்கு சொந்தமான கொட்டகையில் தனது 3ஆடுகளை இரவு மழையின் காரணமாக கட்டி வைத்துள்ளார். இதனையடுத்து காலையில் எழுந்து பார்த்த போது இறந்து கிடைந்தது. அப்போது, அடையாளம் தெரியாத விலங்கு கடித்து 3 ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 20, 2025
தருமபுரியில் நேரடி மாணவர் சேர்க்கை

அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி, தருமபுரியில் சான்றிதழ் படிப்புகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கை 22.09.2025 முதல் நடைபெறும்.தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ தகவல். மாணவர் சேர்க்கை செயல்முறைகள் 30.09.2025 அன்று நிறைவுப்பெற்று வகுப்புகள் 06.10.2025 முதல் தொடங்கும். இதற்கான கலந்தாய்வு அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி தருமபுரியில் நடைபெறும். தகவல் தொலைபேசி 04342-233600,7418844106 தொடர்பு கொள்ளலாம்
News September 20, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செ.19) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News September 19, 2025
தருமபுரி: தொலைந்த பொருட்கள் திரும்ப கிடைக்க…

தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இருமத்தூர் பகுதியில் பிரசித்தி பெற்ற கொல்லாபுரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. வீடுகளில் பொருட்கள் எடுவும் திருடு போய் இருந்தால் இக்கோயிலில் உள்ள மரத்தில் கோழிகளை உயிருடன் கட்டி இந்த மரக்கிளைகளில் தொங்க விட்டால், கோழிகள் இறந்து அவற்றின் உடல் காய்ந்து போவதற்குள் திருட்டு போன பொருட்கள் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க