News May 23, 2024
சுற்றுச்சூழல் மாற்றங்களால் நோய் பரவல் அதிகரிப்பு

காலநிலை & சுற்றுச்சூழல் மாற்றத்தால் மனிதர்களிடையே புதிய நோய் பரவல் அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நோட்ரே பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கையில், ஆசிய புலி கொசு அங்கிருந்து ஐரோப்பாவிற்கு வந்து டெங்கு & சிக்குன்குனியா போன்ற நோய்களை கொண்டு வந்துள்ளது. விரைவான நகரமயமாக்கலின் வேகம், புதிய நோய்களைப் பரப்பும் கிருமிகளையும் ஒட்டுண்ணிகளையும் உருவாக்குகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News March 16, 2026
ஆணவக் கொலைக்கு எதிராக கர்நாடக அரசின் மசோதா!

ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்றும்படி பல ஆண்டுகளாக TN-ல் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி KN பாஷா தலைமையில் ஆணையம் மட்டுமே திமுக அரசால் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஆணவக் கொலையை கடும் குற்றமாக கருதி ’Iva Nammava’ மசோதாவை கர்நாடக அரசு நிறைவேற்றியுள்ளது. ஆணவக் கொலை செய்தோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையை இம்மசோதா பரிந்துரைக்கிறது. இதுகுறித்து உங்க கருத்து என்ன?
News March 16, 2026
தேர்தல் பரப்புரைக்கான டைம் இதுதான்

காலை 6 மணி – இரவு 10 மணி வரை மட்டுமே அரசியல் கட்சிகள் பரப்புரை செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தை மீறி பரப்புரை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள அவர், ஆன்லைன் மூலம் மட்டுமே அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பரப்புரைகளுக்கு அனுமதி கேட்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
News March 16, 2026
அதிமுக கூட்டணியில் இணைந்த இஜபுக!

அதிமுக கூட்டணியில் இணைவதாக நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். EPS-ஐ நேரில் சந்தித்த பிறகு பேசிய அவர், வருங்கால முதல்வரை(EPS) சந்தித்துப் பேசியதில் மகிழ்ச்சி என்றார். தேர்தல் பிரசாரத்தில் ஏவுகணைகளும், எறிகுண்டுகளும் பாயும் எனக் கூறினார். மேலும், வரும் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் எனவும் தொகுதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.


