News May 22, 2024
நாட்டுப்படகு மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக நாளை (23.5.201) முதல் 26.5.24 வரை கடலின் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிமீ. அதிகபட்சமாக 65 கிமீ வரை காற்று வீசக்கூடும். இதனால் மண்டபம் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வழங்கும் வரை தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளம், மீனவர் நலத்துறை
உதவி இயக்குனர் சிவக்குமார் இன்று தெரிவித்தார்.
Similar News
News April 21, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்.21) முதல் மூன்று நாட்களுக்கு மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் பிற்பகல் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் குறிப்பாக பரமக்குடி, அபிராமம், கமுதி, பார்த்திபனூர், முதுகுளத்தூர் மேற்கு பகுதி, சத்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என ராமநாதபுரம் காலநிலை அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
இராமநாதபுரம் பெண்கள் கவனத்திற்கு

இராமநாதபுரம்: பெண்கள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நேரடியான மற்றும் மறைமுகமான பிரச்னைகளை கருத்தில் கொண்டு women helpline – 181 என்ற சேவை செயல்பட்டு வருகிறது. அதில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளான பாலியல் தொந்தரவு, வரதட்சனை கொடுமை, மன அழுத்தம் போன்றவைகளுக்கு மருத்துவம் மற்றும் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்குவர். (இதில் பகிரப்படும் செய்திகள் பாதுகாக்கப்படும்) *ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
பக்ரைன் நாட்டில் உயிரிழந்த இராம்நாடு மீனவர்

பாம்பன் காமராஜர் நகரை சேர்ந்த சீமோசன்(33) என்பவர் மீன்பிடி தொழிலுக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பக்ரைன் நாட்டிற்கு சென்ற நிலையில் நேற்று முன்தினம் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு செல்சியா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். எனவே உயிரிழந்த மீனவர் உடலை சொந்த ஊர் கொண்டுவர அவரது மனைவி தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.