News May 22, 2024

4 ஆண்டுகளில் 240 கொலைகள்: அதிர்ச்சி தகவல்

image

நெல்லை மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 240 கொலைகள் நடந்துள்ளன. இந்தச் சம்பவத்தில் 48 சிறுவர்கள் உட்பட 887 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகரில் 58 கொலைகள், புறநகரில் 182 கொலைகள் என ஆக மொத்தம் 240 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதில் ஆணவக் கொலை ஒன்றும், முன்விரோத கொலைகள் 45, சாதி ரீதியான கொலைகள் 16 என பட்டியலிடப்பட்டுள்ளது.

Similar News

News July 4, 2025

நெல்லையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

நெல்லை மாநகர வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நாளை ஜூலை 5ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் கல்லூரியில் வைத்து பிற்பகல் 12:30 மணியளவில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இந்த முகாமிற்கான ஆயத்த பணிகளை கல்லூரியின் இயக்குனர் கிருஷ்ணகுமார் மற்றும் பேராசிரியர்கள் செய்து வருகின்றனர். *ஷேர் பண்ணுங்க

News July 4, 2025

நெல்லையில் அவசர உதவி எண் அறிவிப்பு

image

நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் எட்டாம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் கூட்டத்தில் யாராவது தவறினால் தகவல் தெரிவிக்கவும், உதவி செய்யவும் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 100, 0462 – 25 62 651 மற்றும் டவுன் காவல் நிலைய எண் 9498101726 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 8, 2025

நெல்லை மாவட்டத்தில் 68 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

நெல்லையில் +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், நெல்லை மாவட்டம் தமிழக அளவில் 16ஆம் இடத்தை பெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 187 பள்ளிகள் உள்ளன. இதில் 4 அரசு பள்ளிகள் உட்பட மொத்தம் 68 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளில் 5745 பேரில் 5318 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

error: Content is protected !!