News May 22, 2024
கோடை மழையால் ஏற்படும் சளி தொல்லை நீங்க…

கோடைக்காலத்தில் பொழியும் மழையால் ஏற்படுகிற நோய்களில் சளி, இருமல், மூக்கடைப்புக்கு முக்கிய இடமுண்டு. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இதில் இருந்து தப்பிக்க தூதுவளை தேநீரை பருகலாம். தூதுவளை, துளசி, அதிமதுரம் ஆகியவற்றை இடித்து, நீரில் போட்டு கொதிக்க வைத்தால் தேநீர் தயார். இதனை காலை – மாலை இருவேளை 3 நாள்கள் குடித்தால் மிகச்சிறந்த நிவாரணம் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Similar News
News November 21, 2025
BREAKING: விலை ₹7,000 குறைந்தது

வெள்ளி விலை 2 நாள்களில் கிலோவுக்கு ₹7,000 குறைந்துள்ளது. நேற்று(நவ.20) ₹3,000 குறைந்த நிலையில், இன்று ₹4,000 குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் 1 கிராம் ₹169-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,69,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை வரும் நாள்களிலும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளதால், முதலீடு நோக்கத்தில் வாங்குவோர் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது.
News November 21, 2025
இறந்த பின்பும் சார்லஸை பழிவாங்கும் டயானா

பாரிஸில் உள்ள கிரெவின் அருங்காட்சியத்தில், பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் மெழுகுச்சிலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனின் தற்போதைய அரசரும், EX கணவருமான சார்லஸ், திருமணத்தை மீறிய உறவை ஒப்புக்கொண்ட அன்று, அவரை பழிவாங்க கருப்பு நிற ஆடையை டயானா அணிந்தார். அதே உடையில் தற்போது மெழுகுச்சிலை திறக்கப்பட்டுள்ளது. 1997-ல் பாரிஸில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
News November 21, 2025
கவர்னருக்கு கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்: CM

மசோதாக்களை நிறைவேற்ற கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் சட்டம் திருத்தப்படும் வரை ஓயமாட்டோம் என்று CM ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். ஆளுநர் வேண்டுமென்றே காலதாமதம் செய்தால் மாநில அரசுகள் வழக்கு தொடுக்க உரிமை உள்ளது என்பதை <<18340284>>SC<<>> உறுதி செய்துள்ளதாக கூறிய அவர், எந்த அதிகாரமும் அரசியலமைப்பை விட பெரிதல்ல என்று குறிப்பிட்டுள்ளார். மாநில உரிமைகளை நிலைநாட்டும் வரை போராடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.


