News May 21, 2024

மதுரை மேலூர் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

image

மதுரை மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராதா. இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய பட்ட போக்சோ வழக்கு ஒன்றின் விசாரணைக்கு ராமநாதபுரம் விரைவு மகளிர் கோர்ட்டில் ஆரம்பமாகவில்லை. இதைத் தொடர்ந்து இன்று நீதிபதி கோபிநாத் விசாரணைக்கு சாட்சி அளிக்க வராத இன்ஸ்பெக்டர் ராதாவிற்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

Similar News

News September 13, 2025

ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

image

ராமேஸ்வரத்தில் ஆடி புரட்டாசி மற்றும் தை அமாவாசை உள்ளிட்ட தினங்களில் உள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்த வருகின்றனர். எனவே, செப்டம்பர் 21ஆம் தேதி மகாளய அமாவாசை கொண்டாடப்பட இருப்பதால் ரயில் பயணிகள் சங்கம் சார்பாக மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இரு மார்க்கமாக சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 13, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

image

இன்று (செப்.12) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என்று காவல்துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News September 12, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளைய முகாம் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களின் குறைகளை கோரிக்கைகளாக பெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நாளை (செப்.13) நடைபெறுகிறது. மண்டபம் வட்டாரம் – மானங்குடி, பஞ்சாயத்து அலுவலகத்தில் முகாம் நடைபெறுகிறது. ஆதார் அட்டை திருத்தம், குடும்ப அட்டை திருத்தம், பட்டா மாற்றம் போன்ற தங்களின் கோரிக்கைகளை முகாமில் மனுவாக அளிக்கலாம்.

error: Content is protected !!