News May 21, 2024
அரசு பள்ளிகளில் பெற்றோரை இணைத்து வாட்ஸ்அப் குழுக்கள்

மதுரையில் கல்வி துறை சார்பில் அரசு பள்ளிகளில் பெற்றோரை இணைத்து வகுப்புகள் தோறும் வாட்ஸ்அப் குழுக்கள் ஏற்படுத்தும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளி வகுப்பறை தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் பெற்றோரை இணைத்து வகுப்புகள் தோறும் வாட்ஸ்அப் குழுக்கள் வரும் கல்வியாண்டு முதல் ஏற்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு மாணவரும் பெற்றோர் செல்போன் எண்ணும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
Similar News
News July 10, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (09.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 9, 2025
அரசு விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு

எழுமலை அருகே எம்.கல்லுப்பட்டி அரசு பள்ளி மாணவர் விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவர்கள் 15 பேர் இன்று காலை விடுதியில் வழங்கப்பட்ட இட்லி, சாம்பார், சட்னி உணவை சாப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து எழுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ, தாசில்தார், சுகாதாரத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News July 9, 2025
மதுரை: மண்டல தலைவர்களின் ராஜினமா ஏற்பு

மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பு நிர்ணயம் செய்வதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்யுமாறு முதல்வர் ஸ்டாலின் ஜூலை.7 அன்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி சரவண புவனேஸ்வரி, முகேஷ் சர்மா, பாண்டிசெல்வி, சுவிதா, வாசுகி, மூவேந்திரன், கண்ணன் ஆகியோர் ராஜினாமா செய்திருந்த நிலையில், அவர்களின் கடிதத்தை ஆணையர் சித்ரா விஜயன் ஏற்றுக்கொண்டார்.