News May 21, 2024
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி

மீஞ்சூர் அரியன் வாயல் அம்மா செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர்கள் வசந்த்-வள்ளி. இவர்களின் குழந்தை கீர்த்தனா (2) வீட்டின் அருகில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. மீஞ்சூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்று முதலுதவி செய்து பின்னர் மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Similar News
News November 22, 2025
திருவள்ளூர்: 49 மின்சார ரயில்கள் ரத்து!

திருநின்றவூர் நிலையப் பணிமனையில் நாளை (நவ-23) காலை 7 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், அந்த வழியாக இயக்கப்படும் 49 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. மேலும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 22, 2025
திருவள்ளூர்: காதலித்து ஏமாற்றியதால் கொலை!

தோட்டக்காடு மேட்டுக் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவரை ரஞ்சித் காதலித்து ஏமாற்றியதால் அந்த பெண் 4 மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து இறந்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் தாய் மாமன் ரஞ்சித்தின் மேல் கொலை வெறியில் இருந்த நிலையில் தனது 4 நண்பர்களோடு நவ-19 ரஞ்சித்தை வெட்டி கொலை செய்துள்ளனர். அதன்பின் போலீசார், அதே கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், விஷால், நவீன்ராஜ், விக்னேஷ், ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
News November 22, 2025
கால்நடை லைசென்ஸ் அவசியம்: ஆவடி மாநகராட்சி அறிவிப்பு

ஆவடி மாநகராட்சி சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதையடுத்து, மாடு வளர்ப்போர் மாநகராட்சி அலுவலகத்தில் கால்நடைகளுக்கு லைசென்ஸ் பெறுவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாடுகளை சொந்த இருப்பிடத்திலேயே பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்றும், இதை மீறி சாலைகளில் காணப்படும் மாடுகள் மாநகராட்சியால் பிடித்து அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.


