News May 21, 2024

மயிலாடுதுறை: முதல் பரிசு வென்ற சிறுமி

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகள் பிரக் ஷா கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் நடைபெற்ற ஏழாவது மாநில அளவிலான யோகா போட்டியில் சிறுவர்களுக்கான பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதல் பரிசு வென்றுள்ளார். அவருக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News November 28, 2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக 28,29 மற்றும் 30 தேதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் நீர் நிரம்பியுள்ள நீர் நிலைகளில் குளிப்பதையும் கால்நடைகளை குளிப்பாட்டுவதையும் தவிர்க்க வேண்டும். ஆடு மாடுகளை மின்கம்பத்தில் கட்ட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

News November 28, 2025

மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

வங்கக் கடலில் நிலவும் ‘திட்வா’ புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.28) அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளார். SHARE NOW!

News November 28, 2025

மயிலாடுதுறை: இந்த நம்பரை SAVE பண்ணுங்க!

image

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இயற்கை இடர்பாடுகள் மழை சேதம் தொடர்பான புகார்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 1077 மற்றும் 04364-222588 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!