News May 21, 2024

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்

image

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நவீன உலகில் சுற்றுச்சூழல் பாதிப்பு மிககிக முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பால், காலநிலை மாற்றம் ஏற்பட்டு, அதிக மழை, அதிக வெப்பம் என பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன மேலும் கோவை யானை வழித்தட விவகாரத்தில் தி.மு.க., அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தர வேண்டும் என்றார்.

Similar News

News August 21, 2025

கோவையில் அண்ணா, பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டி

image

பேரறிஞர் அண்ணா, பெரியார் ஈ.வி.ரா பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 26, 28, கோவையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. எனவே பள்ளி, கல்லூரி தலைமை ஆசிரியர்கள் ஆகஸ்ட் 25-க்கு முன் மாநில கல்வி அலுவலர்களுக்கு, கல்லூரி முதல்வர்களுக்கு மாணவர்களின் பெயர்கள் அனுப்ப வேண்டும் என ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

News August 21, 2025

கோவையில் 6 பேரிடம் ரூ.1.6 கோடி மோசடி

image

கோவை மாவட்டத்தில் இணையதள மோசடி மூலம் நாள்தோறும் பலா் பல லட்சம் ரூபாயை இழந்து வருகின்றனா். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பகுதிநேர வேலைவாய்ப்பு, பெட் எக்ஸ் மோசடி, இணையதள வா்த்தகம், ஆன்லைன் டாஸ்க் என பல்வேறு வழிகளில் மோசடிகள் நடைபெறுகின்றன. அதன்படி 6 பேரிடம் ரூ.1.6 கோடி மோசடி நடந்ததாக புகாரின் பேரில் கோவை சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 21, 2025

கோவையில் மீண்டும் தலைதுாக்கும் போஸ்டர் கலாசாரம்

image

கோவையில் அரசு, தனியார் சுவர்கள், மேம்பாலத் தூண்கள் உள்ளிட்ட இடங்களில் அரசியல், வணிக, தனிநபர் போஸ்டர்கள் அதிகமாக ஒட்டப்படுகின்றன. இது வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடித்து, நகரின் அழகை கெடுக்கிறது. முன்பு ஓவியங்கள் வரைவதால் தடுக்கப்பட்ட போஸ்டர் ஒட்டும் பழக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. பொதுசொத்தையும், நகரின் அழகையும் கெடுக்கும் நிறுவனங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.

error: Content is protected !!