News May 21, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் தேன்கூட்டால் மக்கள் அச்சம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அறையின் மேல்தளத்தில் தேன்கூடு ஒன்று உள்ளது.அந்த பகுதியில் தேனீக்கள் கூடு கட்டுவதும்,தீயணைப்புத் துறையினா் அவற்றை அகற்றுவதும் வழக்கமாகும்.ஆனால் தற்போதைய தேன்கூடு பெரிய அளவிலும்,வெயில் அடிக்கும்போது வெப்பம் தாங்காமல் கலைந்து சென்று மக்களைத் தாக்குகிறது.]. இதனால் ஆட்சியா் அலுவலகம் வரும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது

Similar News

News October 30, 2025

நாமக்கல்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 30, 2025

நாமக்கல்: கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்வு!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.104-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.106 ஆக அதிகரித்து உள்ளது. அதே போல், முட்டை கோழி கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன் விலை ரூ. 2 குறைக்கப்பட்டு, தற்போது கிலோ ரூ.108-ஆக சரிவடைந்துள்ளது.

News October 30, 2025

அமைச்சருக்கு நன்றி தெரிவித்த எம்.பி!

image

நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனை இருந்த இடத்தில் சித்த மருத்துவமனை அமைத்து விரைவில் திறப்பு விழா காண உள்ளமைக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும், தமிழகத்திலேயே சிறந்த கல்வி மாவட்டமாக விளங்கும் நாமக்கல்லில் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!