News April 6, 2026

இராம்நாடு: ஈரான் போர்… சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள்

image

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி, மோர் பண்ணை, நம்புதாளை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஈரானில் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனர். போர் தொடங்கிய காலத்தில் இருந்து மீனவர்கள் அச்சத்தில் வாழ்ந்தனர்.இந்நிலையில் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம், தமிழக மீனவ நலத்துறை அதிகாரிகள் தலையிட்டு 13 மீனவர்களை மீட்டனர். இதனால் தாயகம் திரும்பிய மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News

News April 7, 2026

இராம்நாடு: ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்.? அதிர்ச்சி..

image

ராமநாதபுரம், திருப்பாலைக்குடியைச் சேர்ந்த பிரபு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், எங்கள் வீட்டின் அருகில் இருந்த முஸ்லீம் ஜமாத்துக்கு சொந்தமான இடத்தை கிராம நிர்வாகிகள் சிலர் ஆக்கிரமித்தனர். இது ஜமாத்துக்கு சொந்தமான இடம் தான் என தாங்கள் தெரிவித்ததால், எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர் என கூறியிருந்தார். விரிவான விசாரணைக்காக ஏப்.9 க்கு வழக்கு ஒத்திவைப்பு.

News April 7, 2026

இராம்நாடு: ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்.? அதிர்ச்சி..

image

ராமநாதபுரம், திருப்பாலைக்குடியைச் சேர்ந்த பிரபு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், எங்கள் வீட்டின் அருகில் இருந்த முஸ்லீம் ஜமாத்துக்கு சொந்தமான இடத்தை கிராம நிர்வாகிகள் சிலர் ஆக்கிரமித்தனர். இது ஜமாத்துக்கு சொந்தமான இடம் தான் என தாங்கள் தெரிவித்ததால், எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர் என கூறியிருந்தார். விரிவான விசாரணைக்காக ஏப்.9 க்கு வழக்கு ஒத்திவைப்பு.

News April 7, 2026

இராம்நாடு: நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து.!

image

தொண்டி மகாசக்திபுரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சக்தி பாண்டி (37), உத்தமராஜன் (19). இவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில், திடீரென கடலில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் மீனவர்கள் சக்தி பாண்டி, உத்தம ராஜன் சென்ற படகு காற்றின் வேகத்தில் கவிழ்ந்தது. நடுக்கடலில் தத்தளித்த 2 மீனவர்களையும் அந்த வழியாக மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பார்த்து தங்கள் படகில் ஏற்றி கரைக்கு அழைத்து வந்தனர்.

error: Content is protected !!