News May 21, 2024

இடி தாக்கியதில் கன்று குட்டி உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணவரெட்டி கிராமத்தில் நேற்று மாலை பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தின் கீழே தனது இரண்டு மாத கன்று குட்டியை கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் திடீரென தென்னை மரத்தில் இடி தாக்கியதில் தென்னை மரத்தின் கீழே கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு மாத கன்று குட்டி பரிதாபமாக உயிரிழந்தது.

Similar News

News July 8, 2025

உள்ளூரில் வங்கி அதிகாரி வேலை

image

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ‘லோக்கல் பேங்க் ஆபிசர்’ எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,500 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் உள்ளன. ரூ.48,480 – 85,920 வரை சம்பளம் வழங்கப்படும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும். டிகிரி இருந்தால் போதும் ஜூலை 24ஆம் தேதிக்குள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News July 8, 2025

எந்த வயத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் 2/2

image

குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் அந்த பெண் குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் 2வது பெண் குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, குடும்ப புகைப்படம் ஆகிய சான்றுகளுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் உடனடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்குல் 04146-222288 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News July 8, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு 1/1

image

கள்ளக்குறிச்சியில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அப்பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரமும், இரண்டு குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்புத் தொகை சேமித்து வைக்கப்படும். <<16987300>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!