News May 21, 2024

மே.இ.தீவுகள் அணியில் முன்னணி வீரர்கள் இல்லை

image

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மேற்கு இந்தியத் தீவுகள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், ப்ராண்டன் கிங் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆண்ட்ரே ரஸல், ரூதர்ஃபோர்டு, ரோமன் பவல், ஹெட்மயர், அல்ஜாரி ஜோசஃப் ஆகியோர் ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால் உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை. மே.இ.தீவுகள் அணி வீரர்கள் சர்வதேச போட்டியை விட ஐபிஎல் தொடருக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.

Similar News

News August 14, 2025

திமுக அரசே! இது வீரமல்ல, கோழைத்தனம்: அன்புமணி

image

தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது வீரமல்ல, கோழைத்தனம் என்று அன்புமணி கடுமையாக சாடியிருக்கிறார். CM ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்களை சந்தித்துப் பேசுவது தமக்கு தகுதி குறைவு என்று நினைத்து விட்டாரா என்று கேள்வி எழுப்பிய அவர், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல், அடக்குமுறையை ஏவிய திமுக அரசை, தமிழ்நாட்டு மக்கள் அகற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று எச்சரித்தார்.

News August 14, 2025

தமிழகத்தில் 2,500 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 2.513 உதவியாளர், கிளார்க் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு & D.Cop., வயது வரம்பு: 18 – 32. விண்ணப்பக் கட்டணம்: ₹500. ஆன்லைனில் நடைபெறும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.29. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். Share it

News August 14, 2025

நான் சுயநலமாக சிந்தித்தது கிடையாது: வைகோ

image

சில நேரங்களில் கூட்டணி தவறுகள் நடந்திருக்கலாம், அது மனித இயல்பு என வைகோ கூறியுள்ளார். திண்டுக்கல்லில் விவசாயிகள், மீனவர்கள் துயரம் பற்றிய பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நான் சுயநலமாக சிந்தித்ததில்லை, மக்களுக்காக குரல் கொடுக்கும் நானே ரியல் பெரியாரிஸ்ட் என பெருமிதம் தெரிவித்தார். தனது தாயார், தம்பி, மகன் என மக்களுக்காக சேவை செய்யும் தனது குடும்பம் தியாக குடும்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!