News May 21, 2024
மாயமான சிறுமியை ஏ.ஐ. உதவியுடன் தேடும் போலீசார்

சென்னையில் 13 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன குழந்தையை ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்க காவல்துறை முயற்சி எடுத்துள்ளது. 2011இல் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த குழந்தை கவிதா (2) காணாமல் போனது. ஆண்டுகள் கடந்து ஓடினாலும் குழந்தையை தேடுவதை குடும்பத்தினர் நிறுத்தவில்லை. ஏ.ஐ. உதவியுடன் கவிதாவின் படத்தை 14 வயது தோற்றத்தில் வடிவமைத்த போலீசார் போஸ்டராக வெளியிட்டு சிறுமியை தேடி வருகின்றனர்.
Similar News
News September 14, 2025
வருத்தம் தெரிவித்தார் விஜய்

பெரம்பலூரில் மக்களிடையே பேசாமல் சென்றதற்காக விஜய் வருத்தம் தெரிவித்துள்ளார். நிச்சயமாக மீண்டும் வேறொரு நாளில் பெரம்பலூர் மக்களை சந்திக்க வருவேன் என்று அவர் உறுதியளித்துள்ளார். திருச்சி, அரியலூரில், தேர்தல் பரப்புரையை கேட்க வந்த தொண்டர்கள், பொதுமக்களுக்கு நன்றி கூறியுள்ளார். மேலும், பரப்புரைக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததாக, அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களையும் விஜய் பாராட்டியுள்ளார்.
News September 14, 2025
BREAKING: அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாகிறது

TN-ல் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாகும் என கூறியுள்ளனர். நடப்பாண்டில் அக்டோபர் 3-வது வாரத்தில் பருவமழை தொடங்கி, ஜனவரி மாதம் வரை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக பருவமழைக்கு முன்பு வடிகால் பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பருவமழையை எதிர்கொள்ள ரெடியா?
News September 14, 2025
காதல் திருமணம்: மனம்விட்டு பேசிய உதயநிதி

சென்னையில் அறநிலையத்துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய DCM உதயநிதி, தானும் காதல் திருமணம் செய்தவர்தான் எனவும், அதற்கு எவ்வளவு தடங்கல்கள் வரும் என தனக்கு தெரியும் என்றும் கலகலப்பாக பேசினார். பிறகு, பெரும்பாலான காதல் ஜோடிகளை சேர்த்துவைப்பதால், இது அறநிலையத்துறையா? அன்புநிலையத்துறையா? என நகைச்சுவையாக கேள்வியும் எழுப்பினார்.