News May 20, 2024
கனமழையால் மீனாட்சியம்மன் வீதியுலா ரத்து

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. 8ம் நாளான இன்று கனமழை பெய்து வருவதால் வழக்கமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் புது மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டு கோவில் வளாகத்திற்குள் வசந்த உற்சவம் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சித்திரை வீதி உலாவும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 9, 2025
அரசு விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு

எழுமலை அருகே எம்.கல்லுப்பட்டி அரசு பள்ளி மாணவர் விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவர்கள் 15 பேர் இன்று காலை விடுதியில் வழங்கப்பட்ட இட்லி, சாம்பார், சட்னி உணவை சாப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து எழுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ, தாசில்தார், சுகாதாரத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News July 9, 2025
மதுரை: மண்டல தலைவர்களின் ராஜினமா ஏற்பு

மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பு நிர்ணயம் செய்வதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்யுமாறு முதல்வர் ஸ்டாலின் ஜூலை.7 அன்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி சரவண புவனேஸ்வரி, முகேஷ் சர்மா, பாண்டிசெல்வி, சுவிதா, வாசுகி, மூவேந்திரன், கண்ணன் ஆகியோர் ராஜினாமா செய்திருந்த நிலையில், அவர்களின் கடிதத்தை ஆணையர் சித்ரா விஜயன் ஏற்றுக்கொண்டார்.
News July 9, 2025
தமிழகத்திலேயே அதிக வெயில் மதுரையில்

மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது.
குறிப்பாக தென் மாவட்டங்களில் தினந்தோறும் வெயிலின் அளவு 100ஐ கடந்து சதமடித்து வருகிறது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106 டிகிரி வரை நேற்று வெயில் கொளுத்தியது.
மதுரை மாநகர் பகுதியில் 102 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது.