News May 20, 2024
AAP வெளிநாட்டில் முறைகேடாக நிதி பெற்றது: ED

ஆம் ஆத்மி 2014 முதல் 2022 வரை விதிகளை மீறி வெளிநாட்டில் இருந்து முறைகேடாக நிதி பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ₹7 கோடி நிதி பெற்றுள்ளதாகவும், இதில் FCRA, RPA, IPC விதிகள் பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர்களின் மின்னஞ்சலின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.
Similar News
News August 16, 2025
பட்டாவில் மாற்றம் செய்வது இனி ரொம்ப ஈசி..!

பட்டாவில் திருத்தம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிப்பது, அரசு அலுவலகங்களுக்கு செல்வது என இனி அலைய வேண்டாம். திருத்தம் செய்ய விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, ஏதேனும் ஒரு அடையாள ஆவணம், சொத்து குறித்த பத்திரங்கள், வில்லங்க சான்றிதழ் உள்ளிட்டவற்றுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு சென்றால் போதும். அனைத்து துறை அதிகாரிகளும் அங்கு இருப்பதால் வேலை உடனடியாக முடிந்து விடுகிறதாம்.
News August 16, 2025
3 நாள் STOP பண்ணுங்க… அதிசயம் நடக்கும்!

தொடர்ந்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் ஒரு 3 நாள்களுக்கு, போன் பயன்படுத்துவதை நிறுத்தினால், ஆச்சரியகரமான மாற்றம் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளைஞர்கள் சிலரை 72 மணிநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை நிறுத்தி சோதித்தனர். அப்போது அவர்களின் மூளை அதிசயிக்கத்தக்க முறையில் தன்னைத் தானே ரீபூட் செய்துகொண்டு சிறப்பாக செயல்பட்டதை கண்டறிந்தனர். நீங்களும் ட்ரை பண்ணலாமே?
News August 16, 2025
வாயில் அடித்து கொண்டு புலம்பல்: CM சாடல்

திமுக கூட்டணி கட்சிகளின் ஒற்றுமை பலரது கண்களை உறுத்துவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் இந்திய கம்யூ., மாநில மாநாட்டில் பேசிய அவர், கூட்டணி கட்சிகளின் ஒற்றுமையைப் பார்த்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வதாகவும், எப்படியாவது பிரிந்து விட மாட்டார்களா என புலம்புவதாகவும் கூறியுள்ளார். மேலும், தங்களுக்குள் இருக்கும் கொள்கை நட்பை, தலைமுறை கடந்தும் சொல்லியாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.