News May 20, 2024

ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறக்க அப்பாவு கோரிக்கை

image

நெல்லை மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து தோவாளை கால்வாய் வழியாக ராதாபுரம் கால்வாய் மூலம் 16,000 ஏக்கர் பாசனம் மற்றும் 52 குளங்கள் நீர் பாசனம் பெறுகின்றன. தற்போது ராதாபுரம் கால்வாயில் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு முதல்வருக்கு இன்று கோரிக்கை வைத்துள்ளார்.

Similar News

News May 8, 2025

நெல்லை மாவட்டத்தில் 68 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

நெல்லையில் +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், நெல்லை மாவட்டம் தமிழக அளவில் 16ஆம் இடத்தை பெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 187 பள்ளிகள் உள்ளன. இதில் 4 அரசு பள்ளிகள் உட்பட மொத்தம் 68 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளில் 5745 பேரில் 5318 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News May 8, 2025

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆட்சியர் முக்கிய தகவல்

image

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி
மையம் செயல்படுகிறது. கல்வி ஆலோசனை பெற 9500324417, 9500524417 அழைக்கலாம். பொறியியல் பயில விரும்பும் மாணவர்கள், கலந்தாய்விற்கு விண்ணப்பக்க அரசு பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் நெல்லை மண்டல அலுவலகம், ராணி அண்ணா கல்லூரி ஆகிய 3 மையங்கள் செயல்படுகிறது. இத்தகவலை ஆட்சியர் சுகுமார் இன்று தெரிவித்துள்ளார்.

News May 8, 2025

நெல்லை மாவட்ட அணைகளில் நீர் இருப்பு: பாபநாசம் அணையில் 84.55 அடி

image

நெல்லை மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம். பாபநாசம் அணையில் 84.55 அடி நீர் இருப்பு உள்ளது. 257 கன அடி நீர் வரத்து மற்றும் 200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணையில் 100.6 அடி, மணிமுத்தாறு அணையில் 85.47 அடி, வடக்கு பச்சையாறு அணையில் 40.25 அடி, நம்பியாறு அணையில் 13.12 அடி மற்றும் கொடுமுடி ஆற்றில் 14.75 அடி நீர் இருப்பு உள்ளது.

error: Content is protected !!