News April 3, 2026
விருதுநகர்: தடை செய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம், துலுக்கன்குறிச்சியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் தடை செய்யப்பட்ட சரவெடிகள் தயார் செய்வதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் இரவு, இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பட்டாசு அறைகளில் ஏராளமானோர் பணிபுரிந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆலை மேலாளர் மகேந்திரன் (38) உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Similar News
News April 6, 2026
விருதுநகரில் இனி Whatsapp மூலம் தீர்வு

விருதுநகர் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!
News April 6, 2026
விருதுநகர்: இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் பிரபலங்கள்.!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (ஏப்ரல் 6)கடைசி நாளாக இருப்பதால் நாளை பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை அமைச்சர் K.K.S.S.R.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
News April 6, 2026
விருதுநகர்: விபத்தில் தலையாரி உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை சேர்ந்தவர் சித்ரா(51). தலையாரி வேலை செய்து வந்த சித்ரா கடந்த 31-ம் தேதி மகன் யோகேஸ்வரன் உடன் பைக்கில் சென்ற போது பந்தல்குடி – ஆண்டிபட்டி சாலையில் பைக் பின்னால் அமர்ந்து இருந்த சித்ரா நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


