News May 20, 2024
சபாநாயகரை குற்றம் சாட்டிய முன்னாள் எம்எல்ஏ

ராதாபுரம் முன்னாள் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் இன்பதுரை இன்று (மே 20) தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், வள்ளியூர் வழியே செல்லும் அனைத்து அரசு புறநகர் பேருந்துகளும் வள்ளியூருக்குள் வராமல் புறவழிச் சாலை வழியாக செல்லும் மர்மம் என்ன? ராதாபுரம் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற ஒருவர் இருக்கிறாரா? இல்லையா? என சபாநாயகர் அப்பாவுவை குற்றம் சாட்டியுள்ளார்.
Similar News
News September 8, 2025
திருநெல்வேலியில் இலவசமாக வக்கீல் வேண்டுமா?

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ திருநெல்வேலி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0462-2572689
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 8, 2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சவாரி

தனியார் நிறுவனத்தின் மூலம் பணிகளுக்கு ஹெலிகாப்டர் சவாரி நெல்லையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நபருக்கு 25 கிலோமீட்டர் வரை 5,999 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் சவாரி பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
News September 8, 2025
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மின்தடை

திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் செ. முருகன் அறிவிப்பு: பழைய பேட்டை, பொருள்காட்சி திடல் துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், திருநெல்வேலி நகரம், மேலரத வீதி, பழைய பேட்டை, காந்தி நகர், கரிசல்குளம், வாகைகுளம், பேட்டை, தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். *ஷேர் பண்ணுங்க