News May 20, 2024
திருமண மண்டப உரிமையாளருக்கு ஆட்சியர் திடீர் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து திருமண மண்டப உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “திருமணம் நடத்த முன்பதிவு செய்ய வரும் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் ஆதார் அட்டை மூலம் பிறந்த தேதி மற்றும் நிரந்தர முகவரி ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே திருமணம் நடைபெற வழிவகை செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 8, 2025
காஞ்சிபுரம்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

காஞ்சிபுரம் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
News September 8, 2025
கட்சியில் இருந்து நீக்கியதற்கு இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னாள் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வருகை தந்திருந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் அனைவருக்கும் கட்சியிலிருந்து நீக்கியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து இனிப்புகள் வழங்கினார். உடன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
News September 8, 2025
மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கடும் சோதனை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், கடந்த வாரம் மூதாட்டி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து, மனு கொடுக்க வருபவர்களின் பைகள் மற்றும் குடிநீர் பாட்டில்களை சோதனை செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சோதனைக்குப் பின்னரே பொதுமக்கள் மனு அளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்