News May 20, 2024
9,000 ரன்களை கடந்த விராட் கோலி

சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், RCB வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 3 Four, 4 Six விளாசிய அவர், 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். இதன் மூலம், இந்தியாவில் நடைபெற்ற டி20 போட்டிகளில் 9,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். ரோஹித் ஷர்மா-8,008, ஷிகர் தவான்-7,626, சுரேஷ் ரெய்னா-6,553, ராபின் உத்தப்பா-6,434 ரன்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
Similar News
News September 14, 2025
செப்டம்பர் 14: வரலாற்றில் இன்று

*1948 – ஆபரேஷன் போலோ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்திய தரைப்படை அவுரங்காபாத் நகரைக் கைப்பற்றியது. *1954 – சோவியத் ஒன்றியம் அணு ஆயுத சோதனையை மேற்கொண்டது. *1974 – நடிகை பிரியா ராமன் பிறந்தநாள். *1997 – மத்திய பிரதேசத்தில் ரயில் ஒன்று ஆற்றில் விழுந்து 81 பேர் உயிரிழப்பு. *2005 – விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை ஆரம்பித்தார்.
News September 14, 2025
Cinema Roundup: முருகன் அவதாரம் எடுத்த தனுஷ்

* தினேஷ், கலையரசன் நடிக்கும் தண்டகாரண்யம் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. * இட்லி கடை படத்தில் தனுஷின் கதாபாத்திர பெயர் முருகன். * கிஸ் படத்தின் அடுத்த அப்டேட் காலை 11.07 மணிக்கு வெளியாகும் என கவின் தகவல். * படையாண்ட மாவீரா படத்திற்கு U/A சான்றிதழ் தரப்பட்டுள்ளது. * மிராய் படத்தின் முதல் நாள் வசூல் ₹27.20 கோடி என அறிவிப்பு.
News September 14, 2025
பாகிஸ்தானுடன் ஆடக் கூடாது: உத்தவ் தாக்கரே

ஆசிய கோப்பையில் பாக். உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நம் ராணுவ வீரர்கள் எல்லையில் உயிரை தியாகம் செய்துகொண்டு இருக்கும் நேரத்தில், பாகிஸ்தானுடன் விளையாடுவது அவசியமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். போட்டியை புறக்கணிப்பது, பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை உலகிற்கு தெரிவிக்க ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர் கூறியுள்ளார்.