News May 20, 2024
ஈரானின் புதிய அதிபர் முஹம்மது முக்பர்?

மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஈரானின் துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர், புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டு அரசியலமைப்பின்படி 50 நாள்களுக்குள் புதிய அதிபரை தேர்தெடுக்க வேண்டும். இதனால், முஹம்மது முக்பரின் பெயர் அதிபர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 10, 2026
நாளை அனைத்து பள்ளிகளுக்கும்… பறந்த உத்தரவு

+2 பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நாளை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதனையொட்டி, பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு சென்றுள்ளது. அதன்படி, *பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அம்மை நோய் இருப்பின் அவர்களை தனி அறையில் தேர்வெழுத வைக்க வேண்டும். *அறை கண்காணிப்பாளராக செல்லும் ஆசிரியர்கள் அந்த பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக இருக்கக் கூடாது.
News March 10, 2026
‘சிலிண்டர் தட்டுப்பாடு’ PM மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம்

USA- ஈரான் போர் காரணமாக, இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் PM மோடிக்கு CM ஸ்டாலின் முக்கிய கடிதம் எழுதியுள்ளார். பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், குறு, சிறு தொழில்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், வணிக சிலிண்டர் உபயோகிக்கும் உணவகங்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்யவும், கூடுதல் மின்சாரத்தை வழங்கவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News March 10, 2026
எண்ணெய் நெருக்கடி.. சீனா ஏன் பயப்படவில்லை?

உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், ஈரானிடமிருந்து 90% எண்ணெய் வாங்கும் சீனா சிறிதும் கவலையின்றி இருக்கிறது. ஏனெனில், பெரிய அளவிலான தள்ளுபடியில் எண்ணெய் வாங்கும் சீனா, 140 கோடி பீப்பாய்களை அவசரகால இருப்பாக வைத்துள்ளது. சீனாவில் மின்சார வாகனங்கள் அதிகரிப்பால் எண்ணெயை சார்ந்திருப்பது குறைந்துள்ளது. மேலும், வளைகுடா நாடுகளின் விநியோகம் நின்றாலும் ரஷ்யாவிடமிருந்து வாங்க மாற்று வழியும் உள்ளது.


