News May 20, 2024

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் குழப்பம்

image

திண்டுக்கல் மாநகராட்சிக்கு எல்லை விரிவாக்கத்திற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து பிள்ளையார் நத்தம் நீக்கப்பட்டு அனுமந்தராயன் கோட்டை சேர்க்கப்பட்டால் குழப்பம் நீடிக்கிறது.  கடந்த 2014ல் திண்டுக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு, எல்லை விரிவாக்க பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில் பிள்ளையார் நத்தம் நீக்கம் காரணமாக இங்கு பணியில் தொய்வு ஏற்பட்டது.

Similar News

News March 5, 2026

திண்டுக்கல்: தட்டித்தூக்கிய அமைச்சர்

image

திண்டுக்கல், N.பஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் இமாக்குலின் ஷர்மி. இவர் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய துணை சேர்மனும் ஓ. பன்னீர்செல்வம் தீவிர ஆதரவாளர். இந்நிலையில் நேற்று மாலை திமுக கட்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

News March 5, 2026

திண்டுக்கல்லில் பரபரப்பு; கத்திக்குத்து சம்பவம்!

image

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் கொத்தனார் வேளாங்கண்ணி (39) மற்றும் கிஷோர்வசந்த் (21) இடையே குடிபோதையால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த கிஷோர்வசந்த், 17 வயது சிறுவன் ஆகிய இருவர் வேளாங்கண்ணியை கத்தியால் வெட்டினர். இதில் காயமடைந்த வேளாங்கண்ணி சிகிச்சைக்காக திண்டுக்கல் GH-ல் சேர்க்கப்பட்டார். நகர் தெற்கு போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 5, 2026

பழனி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

பழனியை அடுத்த ஆயக்குடியை சேர்ந்த கருப்புசாமி (33). இவர், குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் யாரும் இல்லாதபோது கருப்புசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த ஆயக்குடி போலீசார் கருப்புசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி GH-க்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிகின்றனர்.

error: Content is protected !!