News May 20, 2024

பணத்தை குப்பையில் போட்டதா RCB

image

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்ததற்கு முக்கிய காரணமாய் இருந்தவர் பந்து வீச்சாளர் யாஷ் தயாள். இதுகுறித்து அவரது தந்தை தயாள் கூறுகையில், “யாஷை பெங்களூரு அணி ₹5 கோடிக்கு வாங்கியபோது அவர்கள் பணத்தை குப்பையில் போடுவதாக பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால், தற்போது அவர்களே தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்துகள் தெரிவிக்கின்றனர்” என்று பெருமிதப்பட்டார்.

Similar News

News March 16, 2026

வங்கி கணக்கில் ₹12,000.. தமிழக அரசு கொடுத்த GOOD NEWS

image

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான திறன் படிப்புதவித் திட்ட தேர்வு(NMMS) ஜன.10 -ல் நடைபெற்றது. இதில், தேர்வானவர்களின் பட்டியலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் Other Examination பகுதியில் சென்று பட்டியலை காணலாம். தேர்வாகியுள்ள மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹12,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு *₹48,000 உதவித்தொகை வழங்கப்படும்.

News March 16, 2026

உலக சாம்பியன்களை பாராட்டிய CM ஸ்டாலின்

image

T20I WC-ஐ தொடர்ந்து 2-வது முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி & வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். அவர்கள் இருவரையும் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து CM ஸ்டாலின் பாராட்டியுள்ளார். அப்போது T20I அணியின் ஜெர்சி & தொப்பியை CM-க்கு இருவரும் பரிசளித்தனர். இந்த சந்திப்பின் போது, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியும் உடனிருந்தார்.

News March 16, 2026

கஞ்சா விற்பனையால் பாலியல் தாக்குதல்: அண்ணாமலை

image

திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில், TN முழுவதும் கஞ்சா புழக்கம் பெருகியுள்ளதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் சேலம் கோரிமேட்டில் 66 வயது மூதாட்டியை, கஞ்சா போதையில் 2 பேர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கும் சம்பவத்தை அதிர்ச்சியுடன் சுட்டிக்காட்டியுள்ளார். கஞ்சா விற்பனையில் பெரும்பாலும் திமுகவினரே ஈடுபடும் நிலையில் உடனடியாக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் கோரியுள்ளார்.

error: Content is protected !!