News May 20, 2024
திருவள்ளூர்: மின்வேலியில் சிக்கி 2 வாலிபர்கள் பலி

திருவள்ளூர் மாவட்டம்,
பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் தனது விவசாய நிலத்தில் மின்சார வேலி அமைத்துள்ளார். அங்கு சென்ற அதே பகுதியைச் சேர்ந்த சாய்குமார் (27), பார்த்தசாரதி (20) ஆகியோர் மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளிப்பட்டு போலீசார் இருவரது உடல்களை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இன்று விசாரிக்கின்றனர்.
Similar News
News April 19, 2025
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து போலீஸ் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (19/04/2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் . மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. *இரவில் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*
News April 19, 2025
திருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்களை தெரிந்துகொள்ளுங்கள். ஆர்.கே. பேட்டை-044-27845709, ஆவடி-044-26850313, திருவள்ளூர்-044-27660254, பூவிருந்தவல்லி- 044-26274314, ஊத்துக்கோட்டை-044-27630262, கும்மிடிப்பூண்டி-044-27921491, பொன்னேரி-044-27972252, திருத்தணி-044-27885222, பள்ளிப்பட்டு-044-27843231. *மிக முக்கிய நம்பர்களான இவற்றை உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
News April 19, 2025
மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவர்

ஆவடி கன்னடபாளையம் பகுதியில் கார்மெண்ட்ஸ் நடத்தி வருபவர் சத்யா(42). இவரது கணவர் ஜெபராஜ் உடனான கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், ஜெபராஜ் நேற்று மாலை பெட்ரோல் கேனுடன் கார்மெண்ட்ஸ் உள்ளே நுழைந்து தன் மீதும் தன் மனைவி மீதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார். 50 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.