News May 20, 2024
திருவள்ளூர்: மின்வேலியில் சிக்கி 2 வாலிபர்கள் பலி

திருவள்ளூர் மாவட்டம்,
பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் தனது விவசாய நிலத்தில் மின்சார வேலி அமைத்துள்ளார். அங்கு சென்ற அதே பகுதியைச் சேர்ந்த சாய்குமார் (27), பார்த்தசாரதி (20) ஆகியோர் மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளிப்பட்டு போலீசார் இருவரது உடல்களை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இன்று விசாரிக்கின்றனர்.
Similar News
News March 6, 2026
திருவள்ளூர்: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

திருவள்ளூர் மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே<
News March 6, 2026
வெளியிட்டார் திருவள்ளூர் கலெக்டர்!

திருவள்ளூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்திப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், “எனது இந்தியா எனது வாக்கு” என்ற மாவட்டத் தேர்தல் அடையாள சின்னத்தை (MASCOT) மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான மு. பிரதாப் நேற்று (05.03.2026) வெளியிட்டார். இந்நிகழ்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
News March 6, 2026
மாதவரத்தில் தட்டி தூக்கிய திமுக!

மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் R. ராஜேந்திரன் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் (MLA) சுதர்சனம் முன்னிலையில் நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைந்தனர். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.


