News May 20, 2024

ஃபரூக்காபாத் தொகுதியில் மறு வாக்குப்பதிவு

image

உத்தர பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் தாமரை சின்னத்திற்கு 8 முறை வாக்களித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற ஃபரூக்காபாத் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் அதிகாரி பரிந்துரைத்துள்ளார். தேர்தல் ஆணையம் இதுகுறித்து முடிவெடுக்கவுள்ளது. முன்னதாக, 8 வாக்குகள் பதிவு செய்த அச்சிறுவன், பாஜக பிரமுகர் அனில் சிங் தாக்கூரின் மகன் என்பது தெரிய வந்துள்ளது.

Similar News

News March 14, 2026

பெட்ரோல் பங்க்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குக

image

போர் பதற்றத்துக்கிடையே பலரும் கேன், டின்களில் பெட்ரோல், டீசலை வாங்கிச் சென்றனர். இதனையடுத்து, இவ்வாறு பாதுகாப்பின்றி எரிபொருள் வழங்கக்கூடாது என இந்திய ஆயில் நிறுவனம் அறிவுறுத்தியது. ஆனால் இதை வாடிக்கையாளர்களிடம் கூறினால், அவர்கள் ஊழியர்களை மிரட்டுவதாக பங்க் உரிமையாளர்கள் கூறுகின்றனர். எனவே, TN-ல் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்குகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி DGP-க்கு கடிதம் எழுதியுள்ளனர்.

News March 14, 2026

அண்ணாமலை கேட்கும் தொகுதியை கொடுக்காத EPS

image

வரும் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட அண்ணாமலை விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால், கோவை மாவட்டத்தில் பாஜகவுக்கு ஒரு தொகுதிதான் தர முடியும்; வேண்டுமானால், கோவை லோக்சபா தொகுதிக்குட்பட்ட பல்லடம் தொகுதியில் போட்டியிடட்டும் என EPS கூறுகிறாராம். அதேபோல், வேளச்சேரியில் போட்டியிட தமிழிசை விரும்பும் நிலையில், விருகம்பாக்கம் (அ) மயிலாப்பூர் தொகுதியை கொடுக்க EPS முன்வந்துள்ளாராம்.

News March 14, 2026

தமிழ்நாடு தேர்தல் தேதி.. வெளியானது UPDATE

image

TN உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க நாளை வரை ECI அவகாசம் வழங்கியுள்ளது. அதேபோல், பிஹார், ஒடிசா, ஹரியானாவில் ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதனால், நாளை தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பில்லை; 16-ம் தேதிக்கு பிறகே அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!